சித்திரா பௌர்ணமி திருவிழாவின் சிறப்பு.
மா.அரு.சோமசுந்தரம்
நடப்பு கரியாக்கரர்.
அருள்மிகு தெண்டாயுதபாணி சுவாமி கோவில்.
தெலுக் இந்தான்
சித்திரா பௌர்ணமி திருநாளின் சிறப்பு, எம தர்ம ராஜாவின் பிரதம கணக்கப்பிள்ளை சித்திர குப்தரின் பிறந்தநாள் .சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் கைலாயத்தில் உமா தேவியாரால் சித்திரமாக வரையப்பட்டு பின் சிவபெருமானால் உயிர் கொடுக்கப்பட்டவர்.பிறக்கும் பொழுதே கையில் எழுத்தாணியும், ஓலைச் சுவடியும் இரு கைகளிலும் கொண்டு பிறந்தவர்.ஆக இவர் முருகன் மற்றும் பிள்ளயாரப்பனின் சகோதரர் .
இவர் எமதர்மராஜனின் நேரடி உதவியாளர்.எமதர்மராஜன் நிர்ணயிக்கும் கால பிரமாணக் கணக்கை சரிவர நிர்ணயித்து மனிதர்கள்,மற்றும் எல்லா உயிர்வாழும் உயிரினங்களின்
புண்ணிய, பாவங்களுக்கு சரியாக கணக்கு வைத்துக்கொள்வது இவரது முக்கிய வேலை.
சித்திரா பௌர்ணமி தினத்தன்று இவரால் ஒருவரின் பாவ,புண்ணியங்கள் சரி பார்க்கப்பட்டு
பாவ,புண்ணியங்களின் படி அவர்களுக்கு நல்லது செய்யுமாறு எமதர்மனுக்கு எடுத்துச் சொல்பவரும் இவரே.
சித்ர குப்தரை நிறைந்த மனதோடு வணங்க வேண்டும்,நல்ல பாடல்களைப் பாடி துதிக்கவேண்டும், நல்ல அன்னம் படைத்தது,பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கவேண்டும். இவையெல்லாம் அவர் விரும்புவது.
தமிழகம்,கேரளா மாநிலங்களுக்கு அருகில்,குமிளி , இடுக்கி மாவட்டத்தில் உள்ள "மங்களா தேவி "ஆலயம் உள்ளது. இது சிலபதிகாராத்து நாயகி கண்ணகியின் பொருட்டு பாண்டிய மன்னனால் கட்டப் பட்ட கோவில் . இந்த கோவில் சித்திரா பௌர்ணமி நாளில் மட்டுமே திறக்கப் பட்டு பூஜைகள் நடத்தப்படும்.
காஞ்சிபுரத்தில் சித்திர குப்தருக்கு தனி கோவில் உள்ளது.
கும்பகோணம்,மயிலாடுதுறை வழியில்,திருகோடிக் காவல் ஊரில் திருகோட்டீஸ்வரர் கோவிலில், சித்திரகுப்தருக்கும்,எம தர்மருக்கும் தனிச் சன்னதிகள் உள்ளன. இங்கு சித்திரா பௌர்ணமி திரு விழா,சித்திரா பௌர்ணமியன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்தியாவில் எட்டுக்குடி முருகன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.
இந்தியாவில் எட்டுக்குடி முருகன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.
நகரத்தார் பெருமக்கள்,' திரை கடலோடியும் திரவியம் தேடு' என்ற முது மொழிக்கேற்ப வியாபாரம் நிமித்தமாக தூரக்கிழக்கு நாடுகளான வியட்நாம், இந்தோனேசியா, சிலோன்,பர்மா,சிங்கப்பூர்,மலேயா ஆகிய நாடுகளுக்கு 200 -250 ஆண்டுகளுக்கு முன்பே பாய்மரக் கப்பல்லில் துணை வேண்டி, சிறு கூட்டமாக, சிறு
குழுக்களாகப் பயணப்பட்டனர்.அத்தனை பெரும் ஒரே தேசத்தை நினைக்காமல் பல்வேறு
தேசங்களுக்கு பயணப்பட்டனர்.அத்தனை பேர் மனதிலும் ஆழமாக இருந்தது
'செட்டிக்கப்பலுக்கு செந்தூரன் துணை'
என்றஅசைக்கமுடியாத நம்பிக்கையும், கடவுள் பக்தியும்.
ஆரம்ப காலத்தில் அதிகமாக நாகப்பட்டினம் துறை முகத்தின் வழியாக கடல் பயணம் மேற்கொண்டதால், எட்டுக்குடி முருகனின் வழிபாடும், அருளாசியும் அவசியமாக இருந்தது. செட்டிநாட்டின் மையத்தில் குடி கொண்டு நகரத்தார் இல்லங்களிலும்,உள்ளத்திலும் குடி கொண்டு,இன்றும்,என்றும் இருப்பவர் குன்றக்குடி முருகன். ஆக வேல் இருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான் என்ற கருத்திலே 'வேலை' துணையாக கடல் பயணத்தில் உடன் கொண்டு சென்றார்கள், தவறாது வழிபட்டு வந்தார்கள்.எட்டுக் குடி முருகன் கோவிலில்
ஆரம்ப காலத்தில் அதிகமாக நாகப்பட்டினம் துறை முகத்தின் வழியாக கடல் பயணம் மேற்கொண்டதால், எட்டுக்குடி முருகனின் வழிபாடும், அருளாசியும் அவசியமாக இருந்தது. செட்டிநாட்டின் மையத்தில் குடி கொண்டு நகரத்தார் இல்லங்களிலும்,உள்ளத்திலும் குடி கொண்டு,இன்றும்,என்றும் இருப்பவர் குன்றக்குடி முருகன். ஆக வேல் இருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான் என்ற கருத்திலே 'வேலை' துணையாக கடல் பயணத்தில் உடன் கொண்டு சென்றார்கள், தவறாது வழிபட்டு வந்தார்கள்.எட்டுக் குடி முருகன் கோவிலில்
கண்ட" சித்திரா பௌர்ணமி திரு விழா " சிறப்பெல்லாம் இங்கு மலேசியா நாட்டிலும் காணவேண்டும் என்ற பரந்த எண்ணமே இங்கு தெலுக் இந்தான் நகரிலும் கண்டு சிறப்புச் சேர்த்தார்கள்.
மலாயா நாட்டிற்கு வந்த நகரத்தார்கள்,மூவார், ,மலாக்கா,சிரம்பான்,கோலாலாம்பூர்,
பினாங்கு, அலோர்ஸ்டார், தைபிங்,ஈப்போ, தெலுக் இந்தான் என்ற ஊர்களிலும், மற்ற முக்கிய ஊர்களிலும் தங்கள் தொழில் நிறுவனங்களை நிறுவி தொழில் செய்து வந்தார்கள்.கோவில் அமைத்த ஊர்களிலெல்லாம், ஒவ் வொரு கோவிலுக்கும் ஒரு திருவிழா என்று ஒற்றுமையாய் சிறப்புச் சேர்த்தார்கள்.
தை மாதம் - தை பூசம் - பினாங்கு .
மாசி மாதம் - மாசி மகம் - அலோர் ஸ்டார் & மாலக்கா.
பங்குனி மாதம் - பங்குனி உத்திரம் - கோலாலம்பூர் .
சித்தரை மாதம் - சித்ரா பௌர்ணமி. - தெலுக் இந்தான்.
வைகாசி மாதம - வைகாசி விசாகம் .- ஈப்போ.
ஆடி மாதம் - ஆடி வேல். - தைப்பிங்.
ஆவணி மாதம் - விநாயகர் சதுர்த்தி - சிரம்பான்.
கார்த்திகை மாதம் - திருக் கார்த்திகை. - மூவார்.
நாள் என் செய்யும் ?வினை தான் என் செய்யும்?
எனை நாடி வந்த
கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்?
கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்?
குமரேசர் இரு
தாளும் சிலம்பும், சலங்கையும் தண்டையும்
தாளும் சிலம்பும், சலங்கையும் தண்டையும்
சண்முகமும்
தோளும், கடம்பும் எனக்கு முன்னே
வந்து தோன்றிடினே. (கந்தரலங்காரம்)
தோளும், கடம்பும் எனக்கு முன்னே
வந்து தோன்றிடினே. (கந்தரலங்காரம்)
அருணகிரிப் பெருமான் இந்த பாட்டிலே 27 நட்சத்திரங்களை உள்ளடக்கி முருகப் பெருமான் தன் உடல் உறுப்புக்களாலும் அணிகலன்களாலும் அவன் தாள் பணிவோரை காத்து அருள்வார் என்பதை சொல்கிறார்.
தாள் - 2
சிலம்பு - 2
சலங்கை - 2
தண்டை - 2
முகம் - 6
தோள் - 12
கடம்பு - 1
பேரா தெண்டாயுத பாணி சுவாமியின் அருளாசி பெற்று உயர்ந்திட அவன் தாள் பணிவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக